Saturday, July 08, 2006

எது சிறந்த இனம்

ஆறு அறிவு படைத்த சிறந்த இனம் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறான் மனிதன், உன்மையில் அவனா சிறந்த இனம், எந்த ஒரு இனமும் தன் இனத்தை கொல்கிறதா? இல்லையே, ஆறு அறிவு படைத்த மனித இனம் தான் தன் இனத்தையே கொல்கிறது, மற்ற எல்லா உயிரினங்களையும் ஆட்டிப்படைப்பதாக கூறுகிறானே, மிருகம் மற்றும் பறவை இனங்கள் சுனாமியை அறிந்து உயிர் பிளைத்தது, ஆனால் ஆறு அறிவு படைத்த மனிதனால் சுனாமி வருவதை அறிய முடிந்ததா? மனித நேயம் என்ற ஒன்றை மறந்தல்லவா வாழ்கிறான், ஆறு அறிவு என்று சொல்லும் மனித இனமே சிந்தித்துப் பார் நாம் இந்த உலகத்தை விட்டு செல்லும் போது கொண்டு செல்வது என்ன! ஒன்றுமில்லை, வாழும் கொஞ்ச நாளில் மனித நேயத்துடன் வாழ்வோம்.