Sunday, June 18, 2006

நீதியின் உறக்கம்

இன்றைய சமூகம்
ஒரு போர்க்களம்
அதில் அறிவுதான்
நமது ஆயுதம்
படிப்பும் துடிப்பும்
பெறுக இளமையே
உன்னையும் உலகையும்
உயர்த்துதற்காக
உன்னையே உணர்ந்து
உணர்துதற்காக
உன் சமூகத்தை
உயர்துதற்காக


கட்டப்பட்ட இறைஆலயம்
இடிக்கப்பட்டது
ஒரு கட்டுக்கதையால்
டிசம்பர்-6 1992
அன்று கள்வனுக்கும்
காவலனுக்கும்
கள்ளக்கூட்டு
அது
தேசத்தின்
கழுவ முடியாதத் தீட்டு....


பாபரி மஸ்ஜித்
யாருக்குச் சொந்தம்...
பச்சிளம் பிள்ளையும்
பதில் சொல்லும் கேள்விக்கு
உச்ச நீதி மன்றம்
ஊமையாகி நிற்கிறது.
ஆண்டு பல கடந்தும்
முடியவில்லை வழக்கு
மாண்புள்ள நீதிக்கு இது
மாபெரும் இழுக்கு.
(ஆசிரியர் ஹாஜாகனி)

0 Comments:

Post a Comment

<< Home