Wednesday, June 21, 2006

கண்ணீர்தேசம்

இந்த கவிதை தொகுப்பின் மூலமாக கவிஞர் ஹாஜாகனி அவர்களின் மனத்திறையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்

"மனிதன் செத்தால் பூமியில் புதைக்கலாம்
பூமியே செத்தால்....?"

இயந்திரத் துப்பாக்கிகளால்
காணாமல் போனது
மனித நேயத்தின் மரண ஓலம்....


இதயம் இல்லாத
இயந்திரத் துப்பாக்கிகளுக்கு
சுடத்தான் தெரியும்...?
சுதந்திரமா தெரியும்....

ஒருபுறம் விடிகையில்
மறுபுறம் இருள்வது பூமியின் நிலை....
இருபுறம் விடிகையில்
நடுபுறம் இருண்டது காஷ்மீரின் கதை....


அதன் தோட்டத்தில்
இனி அமைதியின் பூக்கள் அதிகம் பூக்கட்டும்

சமர் பூமியே....
உன்மீது
சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக....



பொருளாதாரப் புற்றுநோய்

உலகம் வட்டியைத் தின்று கொண்டிருக்கிறது
வட்டியோ உலகத்தை மென்று கொண்டிருக்கிறது


உள்ளுர் வங்கிக்கும், உலக வங்கிக்கும்
ஒரே லட்சியம் ஏழைகளை ஒழிப்பதே...
ஏழ்மையை அல்ல...

கத்தியைக் காட்டிக் கொள்ளையடிப்பவனை சமூகம் 'சீச்சி' என இகழ்கிறது. வட்டியின் மூலம் கொள்ளையடிப்பவனை 'சேட்ஜி' எனப்புகழ்கிறது...

மக்களை வருத்தி வட்டியைக் குடிப்பவனே...
எரிமலையினும் கொடியது ஏழையின் கண்ணீர்.

0 Comments:

Post a Comment

<< Home